ஞாயிறு, ஜனவரி 01, 2012

சிவபெருமான் க்ருபை வேண்டும்!

இது நடந்து ஒரு ஆறு வருடம் இருக்கலாம்.
உனக்கு அம்மா என்ன வேண்டும் என்று ஒரு நாள் இரவு கேட்டேன்.
படுத்த படுக்கையாய் இருந்தார். வியாதி என்று எதுவும் குறிப்பாக இல்லை. அந்த வயதுக்கு உண்டான தள்ளாமை.
என்னை பார்த்தார்.  மீனாட்சியா !! என்றார்.
ஆம் என்றேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றேன். அவர் என்னை இரு கண்களையும் திறந்து பார்த்தார்.
மீனாட்சி, எனக்கு சிவ பெருமான் கிருபை வேண்டும் என்று அந்த சுருட்டி ராக பாட்டை பாடினார். முதல் அடி மட்டுமே அவரால் பாட முடிந்தது. என் வீட்டுக்காரர் கண்கள் குளமாகின.
அடுத்த நாள் அவர் இல்லை.


sivaperuman kirupai vendum
surutti raagam
papanasam sivan

சிவபெருமான் க்ருபை வேண்டும்! - அவன்
திருவருள் பெற வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


அவலப் பிறப்பொழிய வேண்டும்! - அதற்கு வித்த
அவமாயை அகல வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
இராமதாசன் உய்ய வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

எனது வலை நண்பர் எழுதிய  பதிவு கண்டு எழுதிய பதிவு இது.அவர் பதிவுக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை சொடுக்கவும்.

1 கருத்து:

  1. மனம் நெகிழ்ந்தது. எந்த நேரத்திலும் இறைவனை நினைப்பதற்கும் அவன் க்ருபை அவசியம் வேண்டும்தான். பகிர்தலுக்கு நன்றி பாட்டி.

    பதிலளிநீக்கு