ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

Navaroj

இதை அற்புதம் என்று சொல்வதா !! என் அம்மாவின் கருணை என்று சொல்வதா என்றே தெரியவில்லை.

இன்று பிரதோஷம். இப்பொழுது தான் சிவன் கோவில் சென்று பரமேஸ்வரனையும் திருபுர சுந்தரி அம்மனையும் தரிசித்து விட்டு வீடு திரும்பினோம்.

உள்ளே நுழைந்ததும் தொலை பேசி மணி அடிக்கிறது.  யார் அதுவாக இருக்கும் என்று
நினைத்துகொண்டே போனை எடுத்தால் எனது தம்பி ..

ஹைதராபாத் இருந்து.

என்னடா  நீ எப்படி இருக்க ...மீனாட்சி எப்படி இருக்கா என்றவன் கூடவே
அம்மா பாடின பாட்டு ஒன்று அனுப்பி இருக்கேன் கேளு என்றான்.

என்ன வென்று கேட்டேன்.

முக்தி அளிக்கும் திரு மூலச்தானத்தைக் கண்டு பக்தி பண்ணாதவன் பாமரன் அல்லவோ !!

பரமேஸ்வரன் தரிசனம் எனக்கு கண்டிப்பாக முக்தி வெகு சீக்கிரத்தில் அளித்துவிடும். ஐயம் இல்லை.  

பாட்டை கேளுங்கள்.
கோபாலக்ருஷ்ண பாரதி பாடிய பாடல். ராகம் நவரோஜ் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக